Subscribe:

Tuesday, September 06, 2011

சொல்ல முடியாத சோகங்கள்..

இவை
சொல்ல முடியாத
சோகங்களின்
சேகரிப்பின் சுருக்கம் மட்டுமே !


நேரம் ஆகிவிட்டது!
தூரத்தில் அரட்டையடிக்கும்அலுவலர்கள்
எங்கள் மீது அமர்ந்துபணியாற்ற
தாங்களாய் ஏன்இன்னும் வரவில்லை ?
அரசு அலுவலக நாற்காலிகள்!

கும்பிட வந்தவர்கள்
நம்புகின்ற எங்களை
நிர்கதியாய் வெளியேகழற்றிவிட்டுவிட்டு
தர்ம்மமின்றி உள்ளேசென்றுவிட்டார்களே !
நாங்கள் செய்ததவறுதான் என்ன ?
காலம் காலமாய்
வாயிற்படியில்வருந்திக்
கிடக்கும் செருப்புகள்!

நிம்மதியாய் வாழவிடாமல்,
எங்களை அம்மணமாக்கி,
கண்ட இடங்களில்மண்டி யிடவைடவத்து
தண்டனைத் தருகிறீர்களே?
தெருவெங்கும் தங்கள்
சருமம் தெரியகூனிக்குறுகி
தேக்கமாகி துர்நாற்றம்வீசும்
சாக்கடைகள் !

நம்பினால் நலம்தரும் என்னை
அம்புகளால் துளைப்பதுபோல்
அலட்சியம் செய்துவிலக்கி வைக்கின்றார்களே
அழைத்தால் ஓடோடிவரகாத்திருக்கும்
உழைப்பின் ஏக்கங்கள்!

ஐயோ தாங்கமுடியவில்லையே
தயைகூர்ந்து எங்களைவிட்டுவிடுங்கள்
ஓய்வெடுக்க முதுமையிலும்எங்களுக்கு
விடுப்பும் வாய்ப்பும்கிடையாதா ?
தஞ்சமடைந்த தம்பதிகளான
லஞ்சமும் ஊழலும்!




நண்பர்களே.. இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் பகிர்ந்து விட்டுப்போங்களேன்..



Saturday, September 03, 2011

சொல்ல மறந்த வார்த்தைகள்...


வணக்கம் பெற்றோர்களே நாம் ஒவ்வொருவரும் சொல்ல மறந்த வார்த்தைகள் அல்லது சொல்ல மறுக்கும் வார்த்தைகள்தான் என்ன? ஒரு பார்வை வீடியோவுடன்.


இன்று இந்தியாவில் கொண்டாடப்படும் ஆசிரியர் தினம்உயர்திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் தயவால் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காககொண்டாடப் படுகிறது

நம் பிள்ளைகளை தம் பிள்ளைகளாக பார்த்து இந்த சமூகத்தில் மதிப்புமிக்கவராய் உயர்த்தும் ஆசிரியர்களுக்கும், நம் தாய் நாட்டில் தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கும் ஒவ்வொருஆசிரியருக்கும் நன்றி சொல்லும் நேரமிது..

நன்றி நன்றி நன்றிகள் கோடி………


YES ! TEACHERS YOU MAKE A DIFFERENCE








டிஸ்கி :

1.இந்த பதிவை ர(ரு)சித்த பின், ஒரே ஒருகணம் நமக்கும் சொல்லித்தந்த ஆசிரியர்களுக்கு உள்ளுர நன்றி சொல்லிக் கொள்ளுவோம்


2.இந்த நன்றிகள் நம் வளரும் பிஞ்சுகளை போகப் பொருளாய் பார்த்த,பார்க்கும்,பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு அறவே இல்லை.


Friday, September 02, 2011

செருப்பு


வெறுப்பை வெளிக்காட்ட 
பொறுப்பாய்
கரத்தில் ஏந்தப்படும்
முரட்டு ஆயுதம் !

ஒரு மனிதனை
தனித்தனியாளாய் தங்கள்
தலையில் சுமக்கும்
இரட்டை சகோதரர்கள் !


தண்ணீரில் கண்டம் என்பதால்
அண்டி வந்து
கையில் தஞ்சம் புகுந்தாலும்
வெயிலுக்கு ஈடுதரும் தோழன் !

பிடித்தவர்களை மட்டுமே
கடித்துக் குதறி
பல்லில்லாமல்
கவ்வும் கா(வ)ல்காரன் !

மனிதர்கள் புழங்கும்
இடத்திற்குள் புகும் உரிமை
வழக்கமாகத் தனக்கு
மறுக்கப்பட்டாலும்
வெறுப்படையா வழித்துணை !

தெருக்களின் தூய்மை பற்றி
ஒருவருக்கும் அக்கறையில்லை
என்ற அடிப்படை உண்மையை
நினைத்து அடிக்கடி
புன்னகைக்கும் தாழ்மையின் சின்னம் !
  
அடுத்தவரை
கடுமையாக அடிக்க,
விருப்பம் இல்லாவிட்டாலும்
விளாசித்தள்ளும்
சூழ்நிலைக்கைதி!




நண்பர்களே.. இந்த செருப்பு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் கருத்துக்களையும்,வாக்குகளையும் தாராளமாக வழங்கி விட்டுச் செல்லுங்கள்.அடுத்தவர்களும்  இதை பார்க்க வரட்டுமே..

Thursday, September 01, 2011

மழலைப்பருவம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்


வணக்கம் நண்பர்களே…இன்றைய பதிவில் நாம்ஒவ்வொருவரும் கடந்து வந்த பருவத்தை நம் குழந்தைகளும் கடக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்ப்போம்.பொதுவாகவே மழலைப் பருவத்தில் குழந்தைகள் தாயிடம்தான் மிகுந்த ஒட்டுதலோடு இருக்கும். முதன்முதலாகபள்ளியில் சேர்க்கும் போது குழந்தைக்கும் ஏன் தாய்க்கும் மனது கஷ்டமாக இருக்கும். அதற்காக பள்ளியில்சேர்த்தது முதல் மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, குழந்தைகளை கவனிக்கக் கூடாது. அதே போல் குழந்தைகள் வீடு திரும்பியவுடன் பள்ளியில்ஆசிரியர் அடித்தாரா, சகபிள்ளைகள் அடித்தனரா என எதிர்மறையான கேள்விகள் கேட்கக்கூடாது. உங்களின்ஆர்வக் கோளாறால், குழந்தைகள்தினமும் எதையாவதுசொல்ல ஆரம்பித்துவிடும். ஆசிரியர்கள் என்றாலே அடிப்பார்கள் என்ற சிந்தனைமனதில் பதிந்து விடும்.

ஒன்றாம் வகுப்பு வரை,பிள்ளைகளிடம்படிப்பைப் பற்றி அதிகம் பேசவேண்டாம். அந்த வயதில் சகபிள்ளைகளுடன் இயல்பாகபழகுகின்றனரா, நல்லபழக்கவழக்கங்களை கற்றுக் கொள்கின்றனரா என்று கவனிக்கலாம். ஒவ்வொருபிள்ளைகளுக்கும் தனித் திறமை இருக்கும். மூன்று வயதுகுழந்தைக்கும், மூன்றேகால் வயது குழந்தைக்கும்கூட அறிவின் தன்மை வித்தியாசப்படும். மேலும் வகுப்பில் உள்ள அனைத்து குழந்தைகளும் ஒரே வயதாகஇருந்தாலும், சிலமாதங்கள் வித்தியாசம் இருக்கும். எனவே பக்கத்து வீட்டுபிள்ளைகளுடனோ, உடன்பிறந்தவர்களுடனோ படிப்பை, மதிப்பெண்ணைஒப்பிட்டு பேச வேண்டாம்.

குழந்தைகள் இரண்டாம்வகுப்பு படிக்கும் போதே, டாக்டராக வேண்டும்,இன்ஜினியராக வேண்டும்என திணிக்காதீர்கள். அது தவிர எவ்வளவோ துறைகள் நிறைய உள்ளனஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு துறையில் ஈடுபாடு, திறமைஇருக்கும். அத்திறமையை கண்டறிந்து, அதைநோக்கிபிள்ளைகளை முன்னேற்ற வேண்டும். பத்தாம் வகுப்பு படிக்கும் போது இயல்பாக விட்டுவிட வேண்டும்.

நடனம், பாட்டு, இசை, விளையாட்டில் பிள்ளைகள் ஆர்வமாகஇருந்தால் கூட, பத்தாம்வகுப்பு, பிளஸ்2வில் அனைத்தையும்நிறுத்தி விடுகின்றனர் பெற்றோர். இது பிள்ளைகள் மனதில் அதிகமனச்சோர்வையும், படிப்பின்மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும். ஓயாமல் படி, படி என்று சொல்வதை விடுத்து அவர்களுக்கு தேவையானதை செய்தால், அவர்களுக்கும் பதட்டம் இருக்காது.பெற்றோரும் நிம்மதிபெறலாம்.



நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.

Wednesday, August 31, 2011

தாயுள்ளம்





மார்பிலே தவழவிட்டு


மகனோடு கொஞ்சுகிறான்


என் மகன்!





இப்படித்தான் அவனை


ஈரமுடன் நான் வளர்த்தேன்!


எப்படித்தான் மறந்தானோ…


என்னை இன்று துரத்திவிட்டான்!







முதுமையில் தனிமையாய்


வறுமையின் கொடுமையோடு


தள்ளாடித் தவித்தபோதும்


விழிகள் பரபரக்கும்


தூரத்தில் நின்றேனும்


ஒருமுறை என் மகனைக் காண!







பிரார்த்தனை


வேறொன்றுமில்லை


கடைசிவரை கைவிடாமல்


பேரனாவது காக்க வேண்டும்


என் மகனை!











நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.


Tuesday, August 30, 2011

பணத்தின் மதிப்பை பயிற்றுவிக்கும் வழிகள்




வணக்கம் பெற்றோர்களே.பணத்தின் அருமையை நாம் உணர்ந்து இருக்கிறோம்.எனினும் நம் குழந்தைகளுக்கு அதைப்பற்றி உணர்த்தினால் தான் வருங்காலத்தில் நம் குழந்தைகள் வளமாக இருப்பார்கள்..இதை எப்படி செய்வது ? எங்கே கேட்பது என்று யோசிக்க வேண்டாம்.அவர்கள் ஆசைப்பட்டதை பரிசீலனை செய்து  வாங்கித்தரும்போதே உண்மையயை உணர்த்துங்கள்.

பணத்தின் அருமையை உணர்ந்திருப்பது என்பது செலவே செய்யாமல் சேமித்து மட்டும் வைப்பது என்று அர்த்தம் அல்ல. ஒரு பொருளை அதன் சரியான விலையில் வாங்குவது, ஆசைப் படுவதையெல்லாம் வாங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவற்றை மட்டும் வாங்குவது, திட்டமிட்டு செலவு செய்வது என்று இதற்கு இலக்கணம் வகுத்துக்கொண்டு போகலாம்.
குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை ஏன் உணர்த்த வேண்டி வருகிறது? விலை உயர்ந்த பல பொருட்களை சீக்கிரத்தில் உடைத்து விடுகிறார்கள். தொலைத்துவிடுகிறார்கள். அல்லது இப்பொழுதே வாங்கிக்கொடு என்று அடம் பிடிக்கிறார்கள். இல்லையா?






பணம் என்பது அப்பாவுக்கு மாதா மாதம் கிடைக்கிறது என்பது தெரிகிறதே, தவிர அதற்கு எப்படி எல்லாம் உழைக்க வேண்டியிருக்கும் என்பது குழந்தைகளுக்கு தெரியவில்லை.உங்கள் குழந்தைகள் ஏதாவது ஒரு பொருளை வாங்கித்தரச் சொல்லிக் கேட்டால் அல்லது உங்களுக்கு ஒன்றை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அது உங்கள் எத்தனை மணி நேர உழைப்பு என்று கணக்குப் போட்டுப் பாருங்கள்.




ஒரு செல்போன் வாங்க விரும்புகிறீர்கள். விலை பத்தாயிரம் ரூபாய். உங்கள் மாத சம்பளமோ இருபதாயிரம்தான் என்றால் செல்போனின் மதிப்பு உங்கள் 15 நாள் உழைப்பு. இப்படி கணக்கு போட்டுப் பார்த்தால் அதை அவசியம் வாங்கித்தான் ஆக வேண்டுமா என்ற எண்ணம் வரும்.
இதை குழந்தைகளிடம் சொன்னால், வாங்கிக் கொடுத்த பொருளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.

 



மேலும் வளரும் விரைவில்..



நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்.

Monday, August 29, 2011

தாய்மை..


களங்கமற்ற

வளர்பிறையாய்

சீரோடு விளையும்

ஆரோகண அன்பு!


ரத்தத்தை

தித்திக்கும் அமுதாக்கும்

புடமிட்ட

உடல் தொழில்நுட்பம்!


புதிய வரவை

பதியமிட

ஆற்றலாய்

ஊற்றெடுக்கும்நாற்றாங்கால்!


உயர்ச்சி விரும்பிய

இயற்கையின்

தளராத முயற்சிபரிசளித்த

அளவற்ற ஆனந்தம்!


அன்பு

இன்புற்று அரசாளும்

ராஜ்ஜியத்தில்

வீட்சியற்ற ஆட்சிப்பீடம்!


இயற்கையின் மடியில்

உயர் பதவியின்விருதாய்

பணிவுடன்

அணிவிக்கப்பட்டமணிமகுடம்!


இச்சையும்

கொச்சையும்

வித்திடும் வக்கிரங்கள்

மத்தியில்

தனித்துவ உணர்வாய்

புனிதம் புனைந்தமனிதம்!


தசை வளர்ச்சிக்கு

விசையூட்ட

தன் மூச்சையே தானமிடும்

ஆச்சரியமூட்டும் பாசம்!



மண்ணில் திரியும்

எண்ணற்ற உயிர்களின்

சாயமான

தூய நேயத்தின்

நிச்சய உச்சநிலை!



நண்பர்களே இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளியுங்கள்.